Monday, March 16, 2009

ஒரே ஒரு முறை மட்டும்
உன் கண்களை பார்த்து கொள்கிறேன்....
எனக்கு தெரிந்தாக வேண்டும்...
நீ இமைக்கும் போது வருவதுதான் இரவா?
பகலின் சூரியனை விட..
இரவின் மின்மினிகள் எப்படி அழகோ...
அது போலதான்
உன் கொஞ்ச நேர கோபங்களும்..
மற்ற விஷயங்கள் எனும்போது...
நான் கவிதை எழுதுகிறேன்.
உன்னை பற்றி எனும்போது...
நான் எழுதுகிறேன்..
அது கவிதையாகி விடுகிறது.
உன்னை பார்க்கும் கனவுகள்
எப்படி முடிவதே இல்லையோ
அது போலதான்
உன்னை பார்க்காத நாட்கள்
எனக்கு விடிவதே இல்லை.
விளையாடும் பொம்மையென
கையாள்கிறாய் மனதை....
என் இதயத்தை களமென கொண்டு
நீ நடத்தும் காதல் போரில்...
கண்களை ஆயுதமாகவும்..
மௌனத்தை கேடயமாகவும் பயன்படுத்துகிறாய்...
எதிராளி நீ.... ஆயுதம் உன் கண்கள்...
எனும்போது...
விரும்பி ஏற்கிறேன் என் தோல்வியை...
பிடிக்கிறது என்று ஒற்றை வார்த்தையில்...
சொல்ல முடியவில்லை என் காதலை.
ஏன்...
கோடி வார்த்தைகள் கொண்டும்
சொல்வது கடினம்...
வார்த்தைகள் அவசியப்படாத
ஓர் மாலைப்பொழுதில்...
மழையின் ஒவ்வொரு துளியையும்
நமக்குள் வாங்கி
ஒன்றாய் நடக்கையில்...
கோர்த்திருக்கும் நம் கைகளின்
இடையேயான வெப்பத்தில்...
உணர்ந்து கொள்வாய்
உனக்கான என் காதலை...
என் நினைவு ஓர் வற்றாத நதியென...
கால் நனைத்த நீ...
கரையேறி சென்ற பின்னும்...
உன் கொலுசின் ஓசையை
தன்னுள் புதைத்து...
சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது நதி.
நீ நீர் இறைத்து சென்று விட்டாய்...
மூச்சிரைக்கிறது கிணறு.

என்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததே
உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததும்தான்.

என்ன பிடிக்கும் என்று கேட்ட தோழியிடம்
சொல்லி கொண்டிருந்தாய்.
முழு நிலவு...
மலர்ந்த பூக்கள்...
அழகு வானவில்...
நனைக்கும் மழை...
உலகை அழகாக்கும்
அத்தனையும் பிடிக்குமென்றாய்..
சுருக்கமாக சொல்லியிருக்க வேண்டியதுதானே..
உன்னையே உனக்கு பிடிக்குமென்று.

Sunday, March 15, 2009

சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும் காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை...