Friday, May 1, 2015

நீ

ஓர் மழைநாளின் அவசரத்தில்
தடுமாறிய வேளையில்
வேகமாய் பெயர்சொல்லி பின்
சட்டென நாக்கை கடித்துக் கொண்டாய்.
விழாமல் எப்படி இருக்க...

நீ

உன்னை பற்றி எழுதும் கவிதைகளுக்கு
நான் முற்றுப்புள்ளி இடுவதில்லை.
தொடர்புள்ளிகளில் தொடர்கிறது
காதலும் கவிதையும்...

நீ

அள்ளி அள்ளி பருகினாலும்
ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்
வெட்கக் கேணி நீ.