Thursday, April 30, 2015

நீ...

சூரியன் போனதும் ஒளிரும் நட்சத்திரம் போல்
உன்னிடம் பெற்ற புன்னகையை
நீ இல்லாத தருணங்களில்

விடியலில் வாசல்முன் கோலமிடுகிறாய்
ஈரம் காயாத உன் கூந்தல்
கூடுதலாய் ஒரு புள்ளியிடுகிறது
அதனை சுற்றி கோலமிடுகிறது காதல்.

கண்கட்டு வித்தைகளை
மிக எளிதாய் தோற்கடித்து விடுகிறது
உன் கண் காட்டும் வித்தைகள்.

உன்னிடம் கேட்டு வாங்கி
சேகரித்து வைத்திருக்கிறேன்
நிறைய வெட்கங்களை.

நீ கேட்டு வாங்கவும்
சேகரித்து வைத்திருக்கிறேன்
நிறைய முத்தங்களை. 

உன்னை தீண்டி செல்லும் தென்றலை
செல்லமாய் முறைக்கிறாய்.
ஈரப்பதம் கூடிப்போய்
என்மேல் வீசுகிறது குளிர்காற்றாய்.

No comments: