Saturday, July 24, 2010

எனையொத்த சாயலில் கடவுள்...





கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோவிலின்
உள்ளே செல்வதற்கான பாதையெங்கும்
முட்புதர்களால் சூழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் யாரும் வந்துபோனதற்குத்
தடமேதும் இருக்கவில்லை.

நிறைவேற்ற ஏதும் பிரார்த்தனைகளின்றி
வெறித்தபடி இருக்கிறார் கடவுள்.
சுவரெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
முன்னொரு காலத்தின் பிரார்த்தனைகள்..

புறக்கணிக்கப்பட்ட கோவிலினுள்
பசியோடிருக்கும் கடவுளை நோக்கி..
உதட்டில் புன்னகையோடும்
கையில் ஆப்பிளோடும்
நடக்கத் தொடங்குகிறது சாத்தான்.

1 comment:

ReeR said...

அருமையான கவிதை...
நன்றி

www.padugai.com

THanks