Tuesday, August 5, 2008

ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு ஞாபகம்....

உன் நினைவுகள் பெரும்பாலும் மழையோடு இணைந்தவை தான்...

நீ குடை மறந்த ஒரு மழை நாளில்தான்
முதல் முதலாய் மழை எனை நனைத்தது...

உனக்கும் எனக்குமான உரையாடல்களில்
பெரும்பகுதியை மழை நனைத்து செல்லும்...

நீ எனக்கானவள், நான் உனக்கானவன் என நாம் உணர்ந்ததும்
ஒரு மழை இரவின் பகிர்தலில் தான்...

முதல் முதலாய் உன் முத்தத்தின் வெப்பம் உணர்ந்ததும் கூட...
ஒரு டிசம்பர் மாத மாலை மழையில்தான்...

கனவு தகர்த்து காதல் தந்தவள்,
உன் காதல் பறித்து நினைவு தந்த நாளில்...
மௌன சாட்சியாய் பூமி நனைத்தது மழையும்தானே..

ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு ஞாபகம்...
இனி வரும் எல்லா மழையும்... உன் ஞாபகம்...

இப்பொழுதெல்லாம் கண்கள் மூடி உறங்கும் போதும்
கனவெல்லாம் மழை பெய்து விழி நிறைகிறது...
கன்னம் வழி கீழிறங்கி நிலம் நனைக்கிறது...

No comments: