Tuesday, August 5, 2008

கா....த....ல்..


இரவும் கூட பகலாகும்..
பகல் முழுதும் கனவாகும்...
அவள் நினைவுகளே உணவாகும்..

பூக்கள் பறித்த காலம் போய்..
சருகுகள் மிதிக்க கூட கால்கள் தயங்கும்

மொழிகள் யாவும் மௌனமாக
மௌனம் ஒன்றே மொழியாகும்...

இதயம் அருகில் அலைபேசி இருக்கும்..
இடக்கை அதனை அடிக்கடி தேடும்..

சுற்றமும் நட்பும் பாரமாய் தோன்ற..
தனிமை ஒன்றே சுகமாய் தோன்றும்..

பூக்கும் பூ...
சிரிக்கும் குழந்தை...
மாலை மழை..
இரவு நிலா..
காலம் காலமாய் இருப்பதுதான்..
உனக்கு மட்டும் புதிதாய் தெரியும்..

இரவு விழித்தல்..
உணவு மறுத்தல்..
உலகம் மறத்தல்..


கா....த....ல்..

No comments: