Wednesday, August 13, 2008

நீ....நான்....காதல்..




உன்னை பற்றிய நினைவுகளை
சுமந்து சுமந்து நான் பெற்ற குழந்தை
காதல்...
-----------------------------------------------------
கவிதையாய் காதலிக்க
ஆசைப்பட்டவன் நான்...
ஒரு கவிதையை
காதலிக்கும்படி ஆகிவிட்டது...
-----------------------------------------------------
உன் கண்களை
ஒரு முறை பார்த்துவிட்ட பின்...
வானவில் கூட
கருப்பு வெள்ளையாய் தான் தெரிகிறது...
-----------------------------------------------------
நீ எனக்காக பிறந்திருக்கிறாய்..
நான் உனக்காக பிறந்திருக்கிறேன்..
நாம் காதலுக்காக பிறந்திருக்கிறோம்.
-----------------------------------------------------
என் கவிதைகளை படித்தபின்
மௌனமாய் நீ உதிர்க்கும் சிறு புன்னகையில்...
பிழைத்து நிற்கிறது என் காதல்..

No comments: