Monday, March 16, 2009

பிடிக்கிறது என்று ஒற்றை வார்த்தையில்...
சொல்ல முடியவில்லை என் காதலை.
ஏன்...
கோடி வார்த்தைகள் கொண்டும்
சொல்வது கடினம்...
வார்த்தைகள் அவசியப்படாத
ஓர் மாலைப்பொழுதில்...
மழையின் ஒவ்வொரு துளியையும்
நமக்குள் வாங்கி
ஒன்றாய் நடக்கையில்...
கோர்த்திருக்கும் நம் கைகளின்
இடையேயான வெப்பத்தில்...
உணர்ந்து கொள்வாய்
உனக்கான என் காதலை...

No comments: